வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி! மர்ம நபரால் நேர்ந்த துயரம்: பொலிஸ் வலைவீச்சு..!!
சுவிட்சர்லாந்தில் மர்ம நபரால் 74 வயது மூதாட்டி படுகாயமடைந்து சுயநினைவை இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
Effingen பகுதியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டின் முன் சுயநினைவை இழந்து அமர்ந்திருந்த மூதாட்டியை மீட்ட பொலிசார், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணைியில், மூதாட்டி கொள்ளையனிடமிருந்து தப்பிக்க வீட்டின் முதல் தளத்திலிருந்து ஜன்னல் வழியாக குதித்துள்ளது தெரியவந்தள்ளது.
மேலும் வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த திருடன், ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளான். பின்னர் மூதாட்டி படுக்கையறை கதவை உடைத்துள்ளான்.
கொள்ளையனிடமிருந்து தப்பிக்க முயன்ற மூதாட்டி அவன் உடைத்து உள்ளே வந்த ஜன்னல் வழியாக குதித்துள்ளார்.
இதில், படுகாயமடைந்த அவர் சுயநினைவை இழந்துள்ளார், இதனையடுத்து கொள்ளையன் சம்பவயிடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளான்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார் சாட்சிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
Average Rating