வெட்டி பந்தாவால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை..!!
இன்றைக்கு பாவனாவை, அவரின் கார் ட்ரைவர் கடத்தி பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தினார் என்று இப்போது நமக்கு தெரிந்துள்ளது. ஆனால், 2012 ல் பாலிவுட் நடிகை மீனாட்சி தாபா கொடூரமாக கொல்லப்பட்டார்.
இது ஒரு பிளாஷ்பேக் தான். ஆனால், ஒவ்வொரு நடிகையும், குறிப்பாக பெண்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் இதில் உள்ளது என்று நெட்டிசன்கள் இதை நினைவு கூர்ந்து பேசிவருகிறார்கள்.
ஒரு டான்சராக இருந்த டேராடூனை சேர்ந்த மீனாட்சி தாபா,பாலிவுட் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தபோது, அவருக்கு மாதுர் பந்தர்கரின் “ஹீரோயின்” படத்தில் நடிக்கும் ஹீரோயின் வாய்ப்பே கிடைத்தது.
சாதாரண பேக்கிரவுண்டிலிருந்து வந்தபோதும், படப்பிடிப்பு தளங்களில், தான் பெரிய பணக்காரி என்றும், பொழுதுபோக்குக்கு நடிக்க வந்ததாகவும் வெட்டி பந்தா பண்ணிக்கொண்டு இருந்தார். இதை கவனித்த ஜூனியர் ஆர்டிஸ்டுகள் அமித் ஜெய்ஸ்வால்,அவரோட லவ்வர் ப்ரீத்தி, திட்டம் போட்டு ஷூட்டிங்கின்போது மீனாட்சியோடு நெருங்கி பழக ஆரம்பித்தனர்.
ஒருநாள் மீனாட்சியை இருவரும் கடத்தி, அவரது தாய்க்கு போன் செய்து 15 லட்சம் கேட்க, அவர் 60 ஆயிரம் மட்டுமே என்னால் ஏற்பாடு செய்ய முடிந்தது என்று கூறியுள்ளார். அப்போது தான் மீனாட்சி வெட்டி பந்தா பண்ணியுள்ளார் என்று தெரிய வந்திருக்கு.
இதில் கடுப்பான அமித் , ப்ரீத்தி மீனாட்சியை கொடூரமாக கொன்று அவரின் தலையை துண்டித்து எடுத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறி, ஓடுகிற தண்ணீரில் பஸ்சிலிருந்தே அந்த பையை தூக்கி வீசிவிட்டு, அவரது உடலை வாட்டர் டேங்கில் போட்டனர்.
நடிகைகளுக்கு ஷூட்டிங் புளோரில் கூட பாதுகாப்பு இல்லை என்பதையே இந்த சம்பவம் அறிவிக்கிறது. அத்தோடு, தேவையின்றி பெண்கள் வெட்டி பந்தா செய்வதும் கூடாது என்றும் தெரிகிறது.
Average Rating