ஓமலூர் அருகே 2 பெண்டாட்டிக்காரர் அடித்துக்கொலை..!!

Read Time:3 Minute, 24 Second

201702271626067211_omalur-near-man-murder-2-person-arrest_SECVPFசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்புதூர் ஊராட்சி கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் காரிக்குட்டி என்ற சித்தன் (வயது 70).

இவருக்கு கண்ணாம்பாள், சாவித்ரி என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் மூத்த மனைவி கண்ணாம்பாளுக்கு 5 மகன்களும், சாவித்ரிக்கு 2 மகள்கள்.

இந்தநிலையில் காரிக்குட்டி மற்றும் அதே பகுதியை சேர்ந்த வேலு (45), பூஞ்சோலை ஆகிய 3 பேரும் அந்த பகுதியில் அமர்ந்து நேற்றிரவு மது குடித்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த வேலு காரிக்குட்டியை சரமாரியாக தாக்கினார்.

மேலும் ஆவேசம் அடைந்த வேலு, காரிக்குட்டியை பிடித்து வேகமாக கீழே தள்ளினார். இதில் நிலை குலைந்த காரிக்குட்டி தரையில் விழுந்தார்.

படுகாயம் அடைந்த காரிக்குட்டி சற்று நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த வேலுவும், பூஞ்சோலையும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

தகவல் அறிந்த காரிக்குட்டியின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே தீ வட்டிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று காரிக்குட்டியின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவம் தொடர்பாக வேலு, பூங்கோதை ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாரிடம் வேலு கூறியதாவது:-

எனது சகோதரி இந்திராகாந்தியை, காரிக்குட்டியின் முதல் மனைவியான கண்ணாம்பாளின் கடைசி மகன் முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம்.

சமீப காலமாக காரிக்குட்டி முதல் மனைவியின் மகன்களுக்கு எதுவும் கொடுக்காமல் 2-வது மனைவியின் மகள்களையே கவனித்து வந்தார். இதனால் எனது சகோதரியின் குடும்பம் வறுமையில் வாடியது. இதனை அறிந்த நான் காரிக்குட்டியிடம் கேட்டேன்.

அப்போது போதையில் இருந்த காரிக்குட்டிக்கும் எனக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை பிடித்து வேகமாக கீழே தள்ளினேன். இதில் தரையில் விழுந்த அவர் இறந்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வேலு, பூஞ்சோலை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பறவைகளைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்: ஆய்வில் தகவல்..!!
Next post மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்: மத்திய மந்திரி..!!