நடனத்தில் “சீ தமிழ்” தொலைக்காட்சியில் மகுடம் சூட்டிக்கொண்ட யாழ். மங்கை!! வீடியோ

Read Time:2 Minute, 21 Second

20170225_212003யாழ் நெல்லியடியில் இருந்து கடந்த கால யுத்தத்தின் போது புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வரும் எங்கள் ஈழத்து பெண் விதுர்ஷா ரத்னம் தற்பொழுது தமிழக தொலைக்காட்சிகளில் மூன்றாவது இடம் வகிக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான சீ தமிழ் (zee tamil) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகும் பிரபல நடன நிகழ்ச்சியான டான்சிங் கில்லாடி நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் அறிமுக நிகழ்சி பிரமாண்டமான முறையில் நடை பெற்றது இந்த நிகழ்வில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றது, ஈழத்துப் பெண்ணை ராணியாக அலங்கரித்து நடிகை சினேகா அவர்களினால் மகுடம் சூட்டப்பட்டது.

இதற்கு பின்னால் ஒரு வலுவான காரணம் இருக்கிறது.

நடனத்தில் இருந்த அதீத ஆர்வத்தால் தமிழகத்தில் நான்காவது இடத்தில் உள்ள விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியான “ஜோடி நம்பர் 01″ நிகழ்ச்சியின் தேர்வில் கலந்து கொள்ள சென்ற இந்த ஈழத்துப் பெண்ணை அவரது நடனத்தை பார்க்காமலே அழகு குறைவு என்ற ஒரே காரணத்தால் அவரை நிராகரித்தது விஜய் தொலைக்காட்சி.

இதன் காரணமாக மன ரீதியில் பலவீனம் அடைந்த அந்த பெண்ணுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவே இவ்வாறு செய்தது சீ தொலைக்காட்சி.

கடந்த வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் முதலிடம் வரவேண்டிய ஈழத்துப் பெண்ணான ஜெஷிக்காவை சில குளறுபடிகள் மூலம் முதல் இடத்தை வழங்காமல் உலகத் தமிழர்களின் கோபத்துக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழ் அரசியலும்..!! (கட்டுரை)
Next post ஆஸ்கர் 2017… சிறந்த நடிகர் கேஸே அஃப்ளெக், சிறந்த நடிகை எம்மா ஸ்டோன்..!!