உல்லாசத்துக்கு மறுத்த நண்பனின் தாயை கற்பழித்து கொலை செய்த கொடூரன்..!!

Read Time:3 Minute, 11 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (4)கடலூர் மாவட்டத்தில் உல்லாசத்திற்கு மறுத்த நண்பனின் தாயை நபர் ஒருவர் கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கிள்ளை அருகே உள்ள முழுக்குத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த தம்பிராஜா, அலமேலு (60) தம்பதியினரின் மகன் வீரசெல்வன் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, இரவு தூங்கிகொண்டிருந்த அலமேலு காலையில் பார்க்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், வீரசெல்வனின் நண்பன் விஜயகாந்த் அலமேலுவின் வீட்டிற்கு அன்றிரவு சென்றதாக அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் விஜயகாந்திடம் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பொலிசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், மீன்பிடி தொழிழின் மூலம் எனக்கும், வீரசெல்வனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் நான் அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி செல்வேன்.

இந்நிலையில், அன்றிரவு நான் சென்றபோது எனது நண்பனின் தாய் அலமேலு தூங்கிகொண்டிருந்தார்.

அப்போது அவரை எழுப்பி உல்லாசத்திற்கு அழைத்தேன். ஆனால் அவர் மறுத்துவிட்டதோடு மட்டுமல்லாமல் என்னை கேவலமாக திட்டினார்.

இதனால், அவரை அப்படியே துணியால் மூடி வீட்டிற்கு பின்புறமாக தூக்கி சென்று கற்பழித்தேன்.

இந்த உண்மையை அவர் வெளியில் சொல்லிவிடுவாரோ என பயந்து துணியால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, உடலை கொண்டு வந்து அவர் தூங்கிகொண்டிருந்தபடியே போட்டுவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டேன்.

அடுத்த நாள் காலையில் ஒன்றும் தெரியாதது போன்று இறுதிசடங்கில் கலந்துகொண்டேன். ஆனால் பொலிசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் மாட்டிக்கொண்டேன் என கூறியுள்ளார்.

விஜயகாந்தை பொலிசார் கைது செய்து விருத்தாசலம் குற்றவியல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுயஇன்பத்தில் ஈடுபடும்போது செய்ய வேண்டியவை..!! (பெண்களுக்கு மட்டும்)
Next post பொலிசாருடன் விசாரணைக்குச் சென்ற கைதியை சரமாரியாக வெட்டிய மர்மகும்பல்: அதிர்ச்சி வீடியோ..!!