2.5 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் மணமகள் தப்பியோட்டம்: மணமகன் போலீசில் புகார்..!!

Read Time:1 Minute, 55 Second

201702251745464655_Bride-decamps-with-jewellery-on-wedding-night_SECVPF2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருமண நகைகளுடன் மணமகள் தப்பியோடி விட்டதாக, மணமகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரைச் சேர்ந்தவர் ஷியாம் பாபு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவாரியா என்பவருக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஷியாம்பாபு வீட்டிற்கு வந்த தேவாரியா அன்றிரவு அவரின் இல்லத்தில் தங்கியுள்ளார்.

மறுநாள் காலை தேவாரியாவை எழுப்ப அவரின் அறைக்கு ஷியாம்பாபு உறவினர்கள் சென்றுள்ளனர். தேவாரியாவை அவரது அறையில் காணவில்லை.

அத்துடன் கைப்பெட்டியில் வைத்திருந்த 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரின் மொபைலைத் தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.மேலும், தேவாரியாவின் பெற்றோர்களுக்கும் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து மணமகன் ஷியாம்பாபு, மணமகள் தேவாரியா மீது நாஜிராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்தன்றே நகைகளுடன் மணமகள் தப்பியோடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிசாருடன் விசாரணைக்குச் சென்ற கைதியை சரமாரியாக வெட்டிய மர்மகும்பல்: அதிர்ச்சி வீடியோ..!!
Next post இந்த அவமானம் தேவையா? ஓவரா சீன் போடுற பெண்கள் கட்டாயம் பாருங்கள்..!! (வீடியோ)