24 குழந்தைகள் உள்பட 32 பேர் தண்ணீரில் மூழ்கி சாவு

Read Time:1 Minute, 34 Second

In.Bus.jpgகர்நாடக மாநிலத்தில், அணையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்தது. இதில் 24 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியானார்கள். கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டம் பக்சிபண்டு என்ற கிராமத்தில் இருந்து 40 பேர் ஒரு பஸ்சில் சுற்றுலா சென்றனர். கூடலசங்கமா என்ற புனித தலத்துக்கு சென்று விட்டு அவர்கள், கிருஷ்ணா நதியில் கட்டப்பட்டு இருந்த அலமாட்டி அணையை பார்க்க புறப்பட்டனர். வழியில் அந்த சுற்றுலா பஸ், அலமாட்டி அணையில் விழுந்தது.

32 பேர் பலி

இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 24 குழந்தைகள் உள்பட 32 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக செத்தனர். 6 பேர் நீரில் நீந்தி தப்பினார்கள். 2 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு கர்நாடக முதல்-மந்திரி எச்.டி.குமாரசாமி ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

In.Bus.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் – புலிகள் எச்சரிக்கை!
Next post அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள்