13 வயது சிறுமியை கற்பழித்த கொடூரன்: ரூ.1,920 கோடி இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவு..!!
அமெரிக்கா நாட்டில் 13 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1,920 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள Iowa நகரில் James Hohenshell(47) என்ற நபர் தன்னுடைய மகளுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு இவரது வீட்டில் இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தனது மகளின் தோழிகளைகளை வீட்டிற்கு வரவழைக்குமாறு தந்தை அனுமதி அளித்துள்ளார். தந்தையின் அனுமதியால் உற்சாகம் அடைந்த மகள் 3 தோழிகளை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
பின்னர், விருந்து நிகழ்ச்சியில் சிறுமிகளுக்கு தந்தை மது ஊற்றிக் கொடுத்துள்ளார். மகளின் தோழிகளில் ஒருவரான 13 வயது சிறுமிக்கும் மது ஊற்றிக்கொடுத்துள்ளார்.
இதன் பிறகு சுயநினைவை இழந்த அந்த சிறுமியை நபர் கொடூரமாக கற்பழித்துள்ளார்.
இவ்விவகாரம் வெளியானதை தொடர்ந்து ஜேம்ஸ் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரது குற்றத்திற்கு நீதிபதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.
தற்போது நன்னடத்தை காரணமாக அடுத்த மாதம் ஜேம்ஸ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார்.
இந்நிலையில், கற்பழிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
அதில், ‘தங்களுடைய மகள் கற்பழிக்கப்பட்டதால் அவளுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மருத்துச் செலவுகள் மட்டுமின்றி பெரும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளதாக’ பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.
பெற்றோரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி ‘சிறையில் உள்ள ஜேம்ஸ் விடுதலை ஆன பிறகு அவரால் கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு 127 மில்லியன் டொலர்(1920,11,30,000 இலங்கை ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் எனக் கூறி நீதிபதி அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
Average Rating