34 வயது கள்ளக்காதலனுக்கு பெண் பார்த்ததால் 60 வயதான கள்ளக்காதலி அதிர்ச்சி; இறுதியில் இருவரும் தற்கொலை..!!

Read Time:4 Minute, 32 Second

kalakkathal-680x36560 வயது பெண்­ணுக்கும், 34 வயது இளை­ஞ­ருக்கும் ஏற்­பட்ட கள்­ளக்­காதல் தக­ராறில் முடிந்­ததில் இரு­வரும் இறு­தி யில் தற்­கொலை செய்து கொண்ட சம்­பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் வேளச்­சேரியை அடுத்த ஜல்­ல­டி­யன்­பேட்டை முன்னாள் படை­வீரர் கொல­னியை சேர்ந்­தவர் விஜ­ய­குமார்.

இவ­ரது மனைவி லலிதா (60). தம்­பதிக்கு சங்கர், ஆனந்த் என இரண்டு மகன்கள் உள்­ளனர்.

இவர்­க­ளுக்கு திரு­ம­ண­மாகி வீட்டின் கீழ் தளத்தில் வசிக்­கி­றார்கள்.

லலிதா மேல்­த­ளத்தில் வசித்தார். குடும்­பத்­தோடு சேர்ந்து உண்­ணும்­போது மட்டும் கீழ்­த­ளத்­துக்கு வந்து சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் சங்கர், ஆனந்த் இரு­வரும் தி.நகரில் ஐஸ் விற்­பனை செய்யும் நிறு­வ­னத்தை நடத்­து­கி­றார்கள். அதில் ராஜிவ்­காந்தி (34) பகுதி நேர ஊழி­ய­ராக பணி­பு­ரிந்­துள்ளார்.

மேலும் சங்­கரும் ராஜிவ்­காந்­தியும் பாட­சா­லை யில் படிக்கும் காலத்தில் இருந்தே நண்­பர்­க­ளாக இருந்­துள்­ளனர்.

இதனால் அவ்­வப்­போது அவர்­களின் வீட்­டிற்கும் ராஜிவ்­காந்தி வந்து சென்­றுள்ளார். கடந்த வாரம் லலிதா வசித்த தளத்­தி­லுள்ள குளியலறைக்குள் சங்கர் குளிக்கச் சென்­றுள்ளார்.

ஆனால், வாசல் கதவு பூட்­டி­யி­ருந்­துள்­ளது. லலிதா உடல் அச­தியால் உறங்­கு­கிறார் என நினைத்த சங்கர் கீழே சென்­றுள்ளார். ஆனால், நீண்ட நேர­மா­கியும் கதவு திறக்­க­வில்லை.

இதனால் சந்­தே­க­ம­டைந்த சங்­கரும் ஆனந்தும் பொலிஸ் நிலை­யத்­துக்கு தகவல் தெரி­வித்­துள்­ளனர்.

அப்­போது சம்­பவ இடத்­திற்கு சென்ற பொலிஸார் வாசல் கதவை உடைத்துப் பார்த்­ததில் உள்ளே போர்­வையில் தூக்­கிட்டு லலிதா தொங்­கி­யுள்ளார்.

சமை­ய­ல­றையில் ராஜிவ்­காந்தி லலிதாவின் புட­வையில் தூக்கு போட்டு சட­ல­மாக தொங்­கி­யுள்ளார்.

இத­னைப்­பார்த்து அனை­வரும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். இரு­வரின் உடல்­க­ளையும் பிரேத பரி­சோ­த­னைக்கு அனுப்பி வைத்­தனர்.

இது­கு­றித்து வழக்கு பதிவு செய்து விசா­ரித்­தனர்.

முதற்­கட்ட விசா­ர­ணையில், ‘‘வீட்டுக்கு அடிக்­கடி வந்து சென்­ற­போது ராஜிவ்­காந்­திக்கும் லலி­தா­வுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அது நாள­டைவில் கள்­ளத்­தொ­டர்­பாக மாறி­யது.அவ்­வப்­போது இரு­வரும் உல்­லா­ச­மாக இருந்­துள்­ளனர்.

சங்­கரின் பாட­சாலை நண்­ப­ரான ராஜிவ்­காந்தி சிறு வயதில் இருந்தே வீட்­டிற்கு வந்­து­ செல்­வதால் யாருக்கும் சந்­தேகம் வர­வில்லை. லலி­தாவும் ராஜிவ்­காந்­தியும் தாய், மகன் போல் பழ­கு­கி­றார்கள் என்றே எண்­ணி­யுள்­ளனர்.

இந்­நி­லை­யில்தான் ராஜிவ்­காந்­தியின் திரு­ம­ணத்­திற்கு அவ­ரது பெற்றோர் பெண் பார்த்­துள்­ளனர்.

இது­தொ­டர்­பாக லலி­தா­வுக்கும் ராஜிவ்­காந்­திக்கும் இடையே வாக்­கு­வாதம் ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் கடந்த வாரம் வீட்டுக்குச் சென்ற ராஜிவ்காந்தியிடம் லலிதா கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.

அதன் முடிவில் இருவரும் சேர்ந்தே சாக முடிவு செய்துள்ளனர். அதன்படி தூக்கில் தொங்கியுள்ளனர்’’ என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெயிலால் சருமம் கருமையடைவதை தடுக்கும் பேரிச்சம்பழ பேஸ்பேக்..!!
Next post வயிறு குலுங்க குலுங்க சிரிக்க இந்த வீடியோவை பாருங்கள்..!!