இயக்குனர் விஜய் மறு திருமணம்? விளக்கம்..!!

Read Time:2 Minute, 2 Second

72E51ADD-4C2E-4CC8-86F0-191B7815046D_L_styvpfஇயக்குனர் விஜய்யும் நடிகை அமலாபாலும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை ஒரு வருடத்தை முழுதாக நிறைவு செய்யாத நிலையில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து போயினர். சட்டரீதியாகவும் விவகாரத்து பெற்றனர்.

இந்நிலையில், விவகாரத்து பெற்றவுடன், இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், இந்த செய்தியை கேள்விப்பட்ட அமலாபால் கதறி அழுததாகவும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றது.

இதுபோன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேலும் வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு ஆற்றி வரும் ஊடக நண்பர்களிடம், இதுபோன்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற தார்மீக உரிமை எனக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன்.

ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்கவேண்டும் என்பதே என்னுடைய கடமை. அதை முழு மனதோடு நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலூணர்வை தூண்டும் பாம்புகள்..!!
Next post பழங்களை மட்டும் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்..!!