பெற்ற மகளை கற்பழித்த தந்தை: நீதிபதியிடம் கூறிய பகீர் வாக்குமூலம்..!!

Read Time:2 Minute, 28 Second

abuse (17)பிரித்தானிய நாட்டில் பெற்ற மகளை கற்பழித்த தந்தை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள Warwick நகரில் 54 வயதான தந்தை தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் 16 வயதான மகள் தந்தையிடம் வினோதமான உணர்வுகளை தெரிவித்துள்ளார்.

அதாவது ‘ஆண்கள் மீது தனக்கு விருப்பம் ஏற்படவில்லை என்றும், பெண்கள் மீது தான் பாலியல் உணர்வு ஏற்படுகிறது.

மேலும், எதிர்காலத்தில் பெண்களுடன் மட்டுமே உறவு வைத்துக்கொள்வேன்’ என தந்தையுடன் கூறியுள்ளார்.

மகளின் வார்த்தைகளை கேட்ட தந்தை ஆத்திரம் அடைந்துள்ளார். ‘ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வதை விட ஒரு ஆணுடன் தான் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்’ என விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், தந்தையின் வார்த்தைகளை மகள் ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை இதை நிரூபிக்கும் வகையில் மகளை துடிக்க துடிக்க கற்பழித்துள்ளார்.

பின்னர், ‘இப்போது உனக்கு புரிகிறதா? பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வதை விட ஆணுடன் வைத்துக்கொள்வது தான் சிறந்தது’ என எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் வெளியே தெரியவந்ததும் தந்தை கைது செய்யப்பட்டார்.

மேலும், விசாரணையின்போது அவர் ஏற்கனவே மற்றொரு மகளையும் கற்பழித்துள்ளது நீதிபதியுடன் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு மகளையும் கற்பழித்த குற்றங்களை தந்தை ஒப்புக்கொண்டுள்ளதால் அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கூறி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டது: கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலால் பரபரப்பு..!!
Next post குழந்தையாக இருந்த போது கற்பழிக்கப்பட்டேன்: 79 வயது நடிகை ‘செக்ஸ்’ புகார்..!!