16 வயது சிறுமியை கற்பழித்த பாதிரியார்: கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட சம்பவம்..!!

Read Time:2 Minute, 43 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)இந்தியாவில் 16 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய கிறித்துவ பாதிரியாரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கேரளா மாநிலத்தில் உள்ள கன்னூர் நகரில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும், Mananthavady தேவாலயத்தில் Robin Vadakkumcherry(48) என்பவர் பாதிரியாராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்தாண்டு மே மாதம் 16 வயது சிறுமியை பாதிரியார் கொடூரமாக கற்பழித்துள்ளார்.

எனினும், இவ்விவகாரத்தை சிறுமி வெளியில் கூறாமல் மறைத்து வந்துள்ளார். ஆனால், சில மாதங்களில் சிறுமி கர்ப்பம் அடைந்ததால் இவ்விவாகரம் வெளியே கசிய தொடங்கியுள்ளது.

கடந்த பெப்ரவரி 25-ம் திகதி பொலிசாருக்கு சிறுமி கடிதம் ஒன்றை எழுதி தனது நிலையை விளக்கியுள்ளார். இக்கடிதத்தை படித்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிறுமியை நேரடியாக சந்தித்து வாக்குமூலம் பெற்றுள்ளார்.

அதே சமயம், இத்தகவல் அறிந்த உடன் பாதிரியார் தலைமறைவாகியுள்ளார். தனிப்படையை அமைத்த பொலிசார் சில நாட்களில் பாதிரியாரை கைது செய்துள்ளனர்.

மேலும், சிறுமியை கற்பழித்தது உண்மை என பாதிரியார் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், தன்னால் கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு பாதிரியார் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ‘உங்களையும், உங்களது குடும்பத்திற்கும் எப்படி ஆறுதல் கூறுவது என எனக்கு தெரியவில்லை.

கடவுளின் அருளால் நீங்கள் அனைவரும் துன்பத்தில் இருந்து விரைவில் விடுப்படுவீர்கள்.

நான் செய்த குற்றத்திற்காக, உங்களிடமும் உங்களது குடும்பத்தினரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக’ அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பந்தயத்தில் வெற்றி பெற்றும் பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்: அதிர்ச்சி வீடியோ..!!
Next post உற்சாகத்தை அளிக்கும் மூளைக்கான உணவு..!!