19 பெண் சிசுக்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு சாக்கடையில் வீசிய கொடூரம்..!!
மராட்டிய மாநிலம் சங்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் அங்குள்ள மருத்துவமனையில் மர்மான முறையில் மரணமடைந்தார். இது குறித்து விசாரணை செய்வதற்காக போலீசார் அம்மருத்துவமனைக்கு சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மரணமான இளம்பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதையும், வயிற்றிலிருந்த பெண் சிசு அருகிலுள்ள சாக்கடையில் வீச்சப்படதையும் போலீசார் கண்டறிந்தனர்.
மேலும், கருச்சிதைவு செய்யப்பட்ட 19 பெண் சிசுக்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டது தெரியவந்தது. மாய்ஷால் எனும் பகுதியில் பைகளில் கட்டப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டன. சிசுக்கள் கண்டெடுக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கருச்சிதைவு புகாருக்குள்ளான மருத்துவமனைக்கு பின்னால் உள்ளது.
இந்தப் புகாரின் பேரில் மருத்துவர் பாபாசாஹேப் கித்ராபூர் மற்றும் இறந்துபோன பெண்ணின் கணவர் பிரவீன் ஜமாடே ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கருச்சிதைவு குற்றச்சாட்டுக்குள்ளான மருத்துவர் பாபாசாஹேப் கித்ராபூர் தற்போது தலைமறைவாக இருக்கிறார். அவர் ஹோமியோபதி மருத்துவர் எனத் தெரிகிறது.
அந்தக் கால்வாயில்தான் கருச்சிதைவு செய்யப்பட்ட பெண் சிசுக்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீசுவதை பாபாசாஹேப் வழக்கமாக கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
Average Rating