திருமணம் செய்துகொள்ள மறுத்த மணமகனை வீதியில் கட்டியிழுத்துச் சென்ற மணமகள்..!! (வீடியோ)
திருமணம் செய்துகொள்ள மறுத்த மணமகனின் கைகளைக் கட்டி, திருமண மண்டபத்தை நோக்கி மணமகள் வீதியில் இழுத்துச்சென்ற சம்பவம் சீனாவில் இடம்பெற்றது. இதன்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேற்படி மணமகள், இத் திருமணத்தை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் திருமணத் தினத்தில் மணமகனுக்கான ஆடை அலங்காரங்களைக்கூட செய்துகொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மணமகள் அந்நபரை வீதியில் கட்டி இழுத்துச் சென்றாராம்.
தன்னை விட்டுவிடுமாறு அந் நபர் கோருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், ‘நீர் என்னை திருமணம் செய்யப் போகிறீரா இல்லையா?’ என கேட்டவாறு அவரை மணமகள் இழுத்துச் சென்றார்.
சீனாவின் எந்த நகரில் இச் சம்பவம் இடம்பெற்றது என்பது தெரியவில்லை. இறுதியில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனரா என்பதும் தெரியவில்லை.
சீன சமூக வலைத்தளமான வெய்போவில் இவ் வீடியோ தரவேற்றப்பட்டபின் மில்லியன் கணக்கானோர் அதை பார்வையிட்டுள்ளனர்.
Average Rating