உயிர் பிச்சை கேட்டு கதறிய திருநங்கை: அடித்தே கொன்ற கொடூரர்கள்..!! (வீடியோ)
பிரேசிலில் திருநங்கை ஒருவர் ஆறு மர்ம நபர்களால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.
Fortaleza பகுதியிலே குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 42 வயதான Dandara dos Santos என்ற திருநங்கையே மர்ம நபரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த வீடியோவில், சில மர்ம நபர்கள் Dandara dos Santos வீட்டிலிருந்து இழுத்து வந்த தெருவில் போட்டு கொடூரமாக தாக்குகின்றனர். அவர் தன்னை விட்டு விடும் படி கெஞ்கிறார்.
பின்னர், அந்த மர்ம நபர்கள் Dandara dos Santos ஒரு தள்ளு வண்டியில் வைத்து கொண்டு சென்று அடித்தே கொன்றுள்ளனர். இத்தாக்குதலுக்கு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரேசிலில் கடந்த ஒரு மாதத்தில் ஐந்தாவதாக கொல்லப்படும் திருநங்கை Dandara dos Santos என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்த தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசார் வீடியோ மூலம் இக்கொடூர தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேரை அடையாம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Average Rating