அமெரிக்காவில் பயங்கரம்! முதியோர்கள் பயணித்த பேருந்தை 300 அடி தரதரவென இழுத்துச்சென்ற ரயில்..!!

Read Time:2 Minute, 2 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (3)அமெரிக்காவில் முதியோர்கள் பயணித்த பேருந்து ரயில் தண்டவாளத்தில் சிக்கி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாநிலத்திலே இக்கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியதாவது, பேருந்து ஒன்று ரயில் தண்டவாளத்தில் சிக்கி சுமார் ஐந்து நிமிடம் நின்றது. பேருந்து ஓட்டுநர் வாகனத்தை இயக்க முயற்சித்தார்.

இந்நிலையில் பயணிகள் பேருந்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந் நேரத்தில் திடீரென ரயில் வேகமாக வந்து பேருந்தை மோதி தரதரவென சுமார் 300 அடி இழுத்துச்சென்றது.

இதனையடுத்து, பேருந்தில் சிக்கிய மக்களை கார் உதவியுடன் கண்ணாடியை உடைத்து மீட்புக்குழுவினரும் அங்கிருந்த மக்களும் மீட்டனர் என கூறியுள்ளார்.

குறித்த பேருந்தில் முதியோர் இல்லத்தை சேர்ந்தவர்கள் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பயங்கர வித்தில் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் ஏழு பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், தற்போது வரை உயிரிழந்தவர்களின் விபரம் ஏதும் வெளியாகவில்லை.

சம்பவயிடத்திற்கு விரைந்துள்ள பொலிசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிர் பிச்சை கேட்டு கதறிய திருநங்கை: அடித்தே கொன்ற கொடூரர்கள்..!! (வீடியோ)
Next post டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவது அருவருப்பாக இருக்கிறது: தன்சிகா..!!