மகளின் நடவடிக்கைகளால் கவலையில் தாய் நடிகை..!!
தமிழ், இந்தி என பல மொழிகளைக் கொண்ட இந்திய சினிமாவை ஒரு காலத்தில் கலக்கியவர் என்றால் அது நடிகை ஸ்ரீதேவி தான்.
பின்னர் சினித்துறையைச் சேர்ந்த போனி கபூரையே திருமணம் செய்து கரையொதுங்கி விட்டார்.
எனினும் பல வருடங்களுக்கு பின்னர் அவர் திரைத்துறைக்கு வந்து பல படங்களில் நடித்து வருகின்றார்.
அதுமட்டுமன்றி அவரது இரு மகள்களில் ஒருவரான ஜான்வி கபூரை பொலிவுட்டில் கால்பதிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஜான்வியை விரட்டி விரட்டி படமெடுக்கும் வட இந்திய ஊடகங்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் விட்டு வைக்கவில்லை.
அவர் எங்கு சென்றாலும் படமெடுத்து வெளியிடுவதில் அவை குறியாக உள்ளன.
இந்நிலையில், ஜானவி தனது ஆண் நண்பருடன் வெளியில் செல்லும் படங்களும் தொடர்ச்சியாக வெளியாகின.
இதனால் அவரது தாய், கவலையாக உள்ளாராம். கவனமாக இருக்கும்படி வலியுறுத்தியும் மகள் அதை காதில் வாங்கிக்கொள்வதில்லையாம்.
தனது மகளின் பட வாய்ப்புக்கள் இதனால் பாதிக்கப்படுமென்பதே தாயின் கவலையாம்.
Average Rating