வங்கியில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையனை பிணமாக அனுப்பிய பாதுகாவலர்: நீதிமன்றம் அதிரடி..!! (வீடியோ)
அமெரிக்காவில் துப்பாக்கியுடன் வங்கியில் நுழைந்த கொள்ளையனை பாதுகாவலர் சுட்டுக்கொன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
இல்லினாய்ஸ், ராக்போர்ட் பகுதியில் உள்ள அல்பைன் வங்கியிலே குறித்த சம்பவம் நடந்துள்ளது.
சிசிடிவி காட்சியில், முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் உச்சவரம்பில் துப்பாக்கியால் சுட்டப்படி வங்கிக்குள் நுழைகிறான்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் பீதியில் அலறியடித்து மறைகின்றனர்.
உடனே வங்கிக்குள் இருந்த பாதுகாவலர் ஹாரிசன் தனது துப்பாக்கியால் கொள்ளையனை நோக்கி சுடுகிறார்.
குண்டடிப்பட்ட கொள்ளையன் வங்கியை விட்டு ஓடுகிறான். கொள்ளையனின் நெஞ்சில் குண்டு தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து நடந்த விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவன் 34 வயதான லாரன் டர்னர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்த விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், வாடிக்கையாளர்கள் மற்றும் தனது சுய பாதுகாப்பிற்காக பாதுகாவலர் ஹாரிசன் கொள்ளையன் சுட்டதால் அவர் எந்த குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள தேவையில்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Average Rating