13 வயது சிறுமியை கற்பழித்த பொலிஸ் அதிகாரி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
அமெரிக்காவில் 13 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நியூயோர்க் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் Vladimir Krull(39) என்பவர் 12 ஆண்டுகளாக பொலிஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு ஒரு தோழி இருந்ததால் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். தோழிக்கு 13 வயதில் மகள் ஒருவர் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தோழியின் வீட்டிற்கு சென்றபோது அவர் வீட்டில் இல்லை.
தனியாக இருந்த சிறுமியிடம் பேச்சுக்கொடுத்த பொலிஸ் அதிகாரி இறுதியில் அவரை மிரட்டி கற்பழித்துள்ளார்.
இச்சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். பொலிசாரின் மிரட்டலுக்கு அச்சப்பட்ட அச்சிறுமி இவ்விவகாரத்தை தாயாரிடம் தெரிவிக்கவில்லை.
இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட பொலிஸ் அதிகாரி சிறுமியை இரண்டாவது முறையாக கற்பழித்துள்ளார்.
ஆனால், இம்முறை தைரியத்தை வரவழைத்துக்கொண்ட சிறுமி அனைத்தையும் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
விவகாரம் வெளியானதை தொடர்ந்து பொலிசார் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது பணியும் உடனடியாக பறிக்கப்பட்டது.
இந்நிலையில், பொலிஸ் அதிகாரி மீதான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது, 13 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கூறி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
Average Rating