நாய்களுக்கு இரையாக உயிருள்ள பூனை..!! (வீடியோ)
Read Time:1 Minute, 16 Second
துபாயில் நாய்களுக்கு உயிருள்ள பூனையை உணவாக கொடுத்த மூன்று நபர்களுக்கு மிருககாட்சி சாலையை சுத்தம் செய்யும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள ஒரு தொழிலகத்தில் அதன் உரிமையாளரும், இரண்டு ஊழியர்களும் சேர்ந்து கடும் பசியில் இருந்த இரண்டு நாய்களுக்கு உயிருடன் உள்ள ஒரு பூனையை இரையாக போட்டுள்ளனர். இந்த கொடூரத்தை வீடியோவும் எடுத்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமர் ஷெய்க் முஹம்மது பின் ரஷீத் மூவருக்கும் விசித்திர தண்டனை கொடுத்தார்.
அதன்ப்படி, மூவரும் 90 நாட்களுக்கு மிருகக் காட்சி சாலையொன்றைச் சுத்தம் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட மூவரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Average Rating