கணவருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட நடிகை ரம்பாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு..!!

Read Time:3 Minute, 46 Second

201703201332137001_Rambha-to-speak-smoothly-with-her-husband-ordered-by_SECVPFநடிகர் பிரபு நடித்த `உழவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமி(வயது 39).

இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்தனர்.

இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், ரம்பாவுக்கும், அவரது கணவர் இந்திரகுமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார்.

இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட்டில் நடிகை ரம்பா ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

‘தற்போது சினிமாவில் நடிக்காததால் தனக்கு வருமானம் எதுவும் இல்லை. அதனால், மாதந்தோறும் தனக்கு ரூ.1.50 லட்சமும், இரு மகள்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ.1 லட்சமும், ஆக ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க கணவர் இந்திரகுமாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த டிசம்ப்ர் 3ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, ரம்பா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், என்னுடைய கணவர் என்னுடன் தற்போது சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் இருவரும் என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எனவே, இந்த இரு குழந்தைகளின் சட்டப்படியான பாதுகாவலராக என்னை (ரம்பாவை) அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பூங்குழலி முன்பு கடந்த ஜனவரி மாதம் வந்த போது, ரம்பா கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதையடுத்து ரம்பாவுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். வழக்கை தொடர்ந்து விட்டு, கோர்ட்டுக்கு வராமல் இருப்பதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில், நடிகை ரம்பா சென்னை ஐகோர்ட்டில் தன் கணவரை கண்டுபிடித்து தரும்படி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ரம்பா தன்னுடைய குழந்தைகளுடன் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இது குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு என்பதால், நடிகை ரம்பாவும், அவரது கணவர் இந்திரகுமாரும், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் இன்று மாலையில் ஆஜராகவேண்டும். அங்கு இருவரும் தங்களுக்குள் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனில் ஊற வைத்து நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!
Next post சரும பிரச்சனைகளை போக்கும் துளசி ஃபேஸ் பேக்..!!