எரிமலையில் சிக்கிய பி.பி.சி குழுவினர்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 12 Second
இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மவுண்ட் எட்னா, உலகிலேயே மிகவும் உயிர்ப்புடன் செயற்படும் எரிமலைகளில் ஒன்றாகும்.
நேற்று மவுண்ட் எட்னா திடீரென்று வெடித்துச் சிதற ஆரம்பித்தது. அப்போது அங்கு ஆய்வுக்காக சென்ற பி.பி.சி குழுவினர் மீதும், சுற்றுலா பயணிகள் மீதும் எரிமலை கக்கிய பாறைகள் பறந்து வந்து விழுந்தன.
ஒரு சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து அனைவரும் ஓட்டம் எடுத்து வாகனத்துக்குள் ஏறிவிட்டனர். அனைவரும் சிறிய தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இந்த பயங்கரமான காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன் 30 வருட வாழ்க்கையில் இப்படி ஒரு ஆபத்தான சம்பவத்தை பார்த்ததே இல்லை என்று பிபிசி செய்தியாளர் ரெபேக்கா விபரித்துள்ளார்.
Average Rating