சீனாவின் சோங்கிங் நகரில் அடுக்குமாடி கட்டிடங்களின் நடுவே புகுந்து செல்லும் வகையில் ரயில் பாதை..!!
உலகிலேயே அதிகளவு மக்கள்த் தொகை கொண்ட நாடான சீனாவில் மிகக்குறுகிய இடங்கிளிலே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவது வழக்கம். அதிலும் சோங்கிங் நகர் பகுதிகளில் மட்டும் கோடிக்கணக்கான மக்கள் வசித்துவருவதால் நகரைச்சுற்றி எங்கு நோக்கினாலும் அடுக்குமாடி கட்டிடங்களை காணலாம்.
இந்நிலையில் அங்கிருக்கக்கூடிய 19 மாடி கட்டிடம் ஒன்றின் நடுவே ரயில் புகுந்து செல்லும் வையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 8 வது மாடியில், ரயில் நுழைந்து செல்லும் வழியின் நடுவில் ரயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளதால், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அனைவரும் சுலபாக மற்ற இடங்களுக்கு பயணம் செய்யமுடிகிறது.
இந்தியாவில் சென்னை,பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில், மெட்ரோ ரயில் அமைக்கப்பட்ட போது பல்வேறு குடியிருப்புகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீனாவின் இந்த திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
Average Rating