இலங்கைக்கு தமிழர்களுக்கு வீடு: ரஜினி செல்வதன் பின்னணி என்ன?..!!
லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வாழ் தமிழர்களுக்கு வழங்க இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனால், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ஆம் திகதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க உள்ளார்.
ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் வெளிவரும் போது ஏதேனும் எதிர்ப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
Average Rating