சுற்றுலாவுக்காக வந்த பெண் சவப்பெட்டியில் தாய்நாடு செல்ல நேர்ந்த அவலம்..!! (படங்கள்)
Read Time:1 Minute, 18 Second
இந்தியாவிற்கு சுற்றுலா வந்த நிலையில் அங்கு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அவரது தாய் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
டெனியெல் மெக்லாப்லின் என்ற 28 வயதான பெண்ணே இந்தியாவின் கோவாவில் வல்லுறவின் பின் கொல்லப்பட்டிருந்தார். இக்கொலை தொடர்பில் விகாத் பகத் என்ற 23 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டிருக்கும் நபர் மீது ஏற்கெனவே கொலை குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுகள்படி பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பெண்ணின் சலடம் வயல்வெளி ஒன்றில் கடந்த கண்டெடுக்கப்பட்டது. இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அப்பெண்ணின் சடலம் அவரது தாய் நாடான அயர்லாந்துக்கு அனுப்பப்படுகின்றது.
Average Rating