தாயாரை மரணத்தில் இருந்து காப்பாற்றிய சிறுவன்: சிலிர்க்க வைக்கும் சம்பவம்..!! (வீடியோ)

Read Time:3 Minute, 13 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரித்தானியாவில் மரணத்தின் பிடியில் இருந்த தாயாரை தனது மொபைல் செயலியின் உதவியுடன் காப்பாற்றி அனைவரையும் நெகிழ வைத்துள்ளான் நான்கு வயது சிறுவன்.

பிரித்தானியாவின் கென்லே பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் நான்கு வயது சிறுவன் ரோமன் தனது தாயாருடன் குடியிருந்து வருகிறான்.

இந்நிலையில் சம்பவத்தின்போது தனது தாயார் மயங்கிய நிலையில் இருப்பதை அறிந்து எழுப்பியுள்ளான். தனது தாய் எழுந்திருக்காமல் இருந்ததையடுத்து பதறிய ரோமன். தனது தாயின் ஐபோனை எடுத்து அவரது கட்டைவிரலை வைத்து சிரியை ஆன் செய்துளான்.

அதன் மூலம் தனது தாய் மயங்கிய நிலையில் இருப்பதை தெரிவிக்க சிரி ஆம்புலன்ஸுக்கான எண்ணான 999- ஐ அழைத்துள்ளது. அதில் பதிலளித்த காவலர்கள் உங்களது அவசர தேவை என்ன என கேட்க?

”நான் ரோமன், என் தாய் வீட்டில் மயங்கிய நிலையில் இருக்கிறார். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? அவரை வீட்டில் வந்து அழைத்து செல்ல முடியுமா என கேட்டுள்ளான்.

அவர் இறந்துவிட்டார் என நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளான். மீண்டும் 999 எண்ணில் தொடர்பில் இருந்தவர்கள் தெளிவாக ரோமனிடம் கேட்க அவர் கண்களை மூடிய நிலையில் நீண்ட நேரமாக இருக்கிறார். அவர் மூச்சுவிடவில்லை என்று மழலை மாறாமல் கூறியுள்ளான்

நிலையை புரிந்து கொண்ட அவசர அழைப்பில் இருந்தவர்கள் ரோமனிடம் வீட்டு முகவரியை கேட்டுள்ளார்கள். அவனும் முகவரியை அளிக்க 13 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து மயக்கத்தில் இருந்த ரோமனின் தாயை காப்பாற்றியுள்ளது. அவர் சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் உயிர்பிழைத்துள்ளார். இதற்கு காரணம் ரோமன் சரியான நேரத்தில் சிரியை கையாண்டு 999க்கு அழைத்தது தான் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் நெகிழ்ந்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி ”குழந்தைகள் இன்றைய தொழில்நுட்பத்தை நன்கு அறிந்துள்ளனர். அவசர நேரங்களில் சமயோஜிதமாக யோசித்து சிரியை அழைத்து தனது தாயை காப்பாற்றியிருப்பது உண்மையாலுமே பெருமைப்பட வேண்டிய விடயம் என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சசிகுமாருக்கு தங்கை ஆகும் முன்னணி நடிகை..!!
Next post எனக்கு அது என்னவென்றே தெரியாது..!!