வெளிநாட்டு இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: மசாஜ் பார்லர் உரிமையாளர் கைது..!!
Read Time:1 Minute, 27 Second
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஹனுமன் காட் பகுதிக்கு 21 வயது ஆஸ்திரிய பெண் ஒருவர் மசாஜ் செய்துகொள்ள சென்றுள்ளார். சென்ற இடத்தில் மசாஜ் பார்லர் உரிமையாளர்(45) அந்த பெண்ணுக்கு செக்ஸ் சில்மிஷம் கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரிய பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் உள்ளூர் போலீசார் மசாஜ் பார்லர் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ராஜேந்திர பிரசாத் கூறுகையில் “அந்த பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.வாக்குமூலத்தைத் தொடர்ந்து மசாஜ் பார்லர் உரிமையாளரைக் கைது செய்துள்ளோம். சம்பவம் குறித்து ஆஸ்திரிய நாட்டு தூதரகத்துக்கு தகவல் அளித்துள்ளோம்” என்றார்.
பாதிக்கப்பட்ட ஆஸ்திரிய பெண் கடந்த 3 மாதங்களாக உதய்பூரில் தங்கி தனது மேற்படிப்பு குறித்த ஆராய்ச்சியை செய்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Average Rating