டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு..!!
105 வருடங்களுக்கு முன்னர் கடலில் விபத்துகுள்ளாகி மூழ்கிய டைட்டானிக் கப்பலை கடலுக்கு அடியில் சென்று பார்ப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.
ஆர்.எம்.எஸ்.டைட்டானிக் எனும் கப்பலானது 1912-ம் ஆண்டு 2,224 பேருடன் பிரிட்டனில் இருந்து அமெரிக்காவினை நோக்கி தனது பயணத்தினை தொடங்கிய நான்காவது நாளே விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியது.
உடைந்த அந்த கப்பலை கடல் அடியில் சென்று பார்ப்பதற்காக பிரிட்டனை சேர்ந்த புளூ மார்பிள் நிறுவனமானது, பிரத்யேகமாக ஆழ்கடல் கலத்தின் உதவியுடன் ஆழ்கடலில் 4,000அடியில் மூழ்கியுள்ள கப்பலை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த 8நாள் சுற்றுப்பயணமாக கனடா நாட்டு கடற்கரையில் புறப்படும் கப்பல் கடலில் மூழ்கி டைட்டானிக் கப்பலை கண்டு மீண்டும் மேலே வருவதற்கு 3 மணி நேரம் ஆகும்.
இந்த சுற்றுலாவுக்கு கட்டணமாக 1.05டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலில் டைட்டானிக் கப்பலில் கட்டணமாக நிணயிக்கப்பட்ட கட்டணத்தின் தற்போதைய மதிப்பையே நிர்ணயித்துள்ளதாக அந்நிறுவனமானது கூறியுள்ளது.
Average Rating