பெரு நாட்டில் விமானவிபத்து 141 பயணிகளின் நிலை என்ன? (வீடியோ)
Read Time:1 Minute, 4 Second
பெரு நாட்டில் இடம்பெற்ற விமானவிபத்தொன்றின் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் தெரியவருவது:விமான ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், தீ பற்றியும் எரிந்துள்ளது.
போயிங் 737 , பயணிகள் விமானமொன்றே விபத்தில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்தின் போது விமானத்தில் 141 பயணிகள் இருந்துள்ளனர்.
எனினும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசர நிலை காரணமாக விமானத்தை தரையிறக்க முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் சில சுட்டிக்காட்டியுள்ளன.
Average Rating