காணாமல் போன இளைஞன் இராட்சத மலைப்பாம்பின் வயிற்றுக்குள்..!! (பதறவைக்கும் காணொளி)
காணாமல் போன இந்தோனேசிய பிரஜை ஒருவர், உயிரிழந்த நிலையில் மலைப் பாம்பின் உடம்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியா Sulawesi தீவில் காணாமல் போன அக்பர் என்ற 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு பாம்பின் உடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் காணாமல் போன நிலையில் பெரிய எடை கொண்ட மலைப் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
எனவே காணாமல் போன குறித்த இளைஞரை மலைப் பாம்பு விழுங்கியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்ட நிலையில் பாம்பை வெட்டிப்பார்த்துள்ளனர்.
இதில் 7 மீற்றர் நீளம் கொண்ட குறித்த மலைப் பாம்பின் உடலில் இருந்து காணாமல் போன இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த, மலைப்பாம்பு மனிதர்களை விழுங்கும் அளவிற்கு சக்தி கொண்டதாகவும் பெரிதாகவும் காணப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating