15 பெண்கள் கற்பழிப்பு: சீன இளைஞருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
15 பெண்களை கற்பழித்து அவர்களில் 7 பேரை கொலை செய்த லீ பெங்போவுக்கு (28) கடந்த செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீன நியூஸ் சர்வீஸ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், விவசாயப் பெண்கள் என்று 15 பெண்களை லீ பெங்போ கற்பழித்துள்ளார். 15 வயது முதல் 55 வயது வரையிலானவர்கள் இவரது காமவெறிக்கு பலியாகி உள்ளனர்.
தனது செயலுக்கு லீ பெங்போ தேர்ந்தெடுத்த இடங்கள் பழத்தோட்டங்கள், வயல்கள். விவசாயப் பெண்கள் வயலுக்கு தனியாகச் செல்ல பயந்தனர். பள்ளி செல்லும் மாணவிகள் குழுக்களாகச் சென்றனர்.
போலீஸôரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் லீ பெங்போ சிக்கினான். டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மீதான குற்றம் உறுதியானது. நீதிமன்றம் லீ பெங்போவுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை ஆட்சேபித்து லீ தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், ஷாங்ஸி மாகாண நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்து விட்டது.
பெரும்பாலான கற்பழிப்புகளை ஷாங்ஸி மாகாணத்தில் வெய்னன் நகரில் லீ பெங்போ செய்துள்ளார். இந்த நிலையில் அவரது மரண தண்டனை அங்கேயே நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரது பின்தலையில் சுடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.