செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்..!!

Read Time:3 Minute, 10 Second

charging_mobile_death_001.w540செல்போனுக்கு சார்ஜ் போட்ட நிலையில், காதில் ஹெட்செட் மாட்டி பாட்டு கேட்ட வட மாநில வாலிபர் திடீரென மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை அடையாறு எம்.ஜி. சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் ஓட்டலில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த பில்லோ ரியாங் (20) பணியாற்றி வந்தார். கடந்த 1ம் தேதி மதியம் பில்லோ ரியாங் வேலைக்கு செல்லவில்லை. அவர் அறையில் இருக்கிறாரா என்பதை பார்க்க திருச்செந்தூர் என்பவர் அன்று மாலை பில்லோ ரியாங் தங்கியிருந்த அறைக்கு வந்தார்.

அங்கு செல்போன் சார்ஜ் போடப்பட்டிருந்த நிலையில், காதில் வாக்மேன் மாட்டியபடி ரத்தக்கறையுடன் பில்லோ ரியாங் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்ததும் சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பில்லோ ரியாங்கின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செல்போன் சார்ஜ் போட்டுக் கொண்டே ஹெட்செட்டில் பில்லோ ரியாங் பாட்டு கேட்டபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததால் காதில் நரம்பு வெடித்து ரத்தம் வெளியேறி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் முழு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

அலட்சியமே காரணம்

செல்போனில் பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி, இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது செல்போனில் பேசிக்கொண்டு செல்வதால் விபத்து, செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு எடுக்க மறந்து விடுவதால் வெடித்து சிதறி வீடுகளில் தீவிபத்து என பல்வேறு சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்வது வாடிக்கையாகி விட்டது. ஆனாலும், விழிப்புணர்வு இல்லாதது மற்றும் அலட்சியம் காரணமாகவே இதுபோன்ற விபத்துகள், உயிர் பலி நிகழ்வது தொடர்கதையாகிறது என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உச்ச கொண்டாடத்தில் சூர்யா ரசிகர்கள்? இதுதான் விசயமா..!!
Next post தொகுப்பாளினியின் காலை பிடித்த மா.கா.பா… ஒட்டு மொத்த அரங்கமே பல்ப் வாங்கிய தருணம்..!! (வீடியோ)