தொகுப்பாளினியின் காலை பிடித்த மா.கா.பா… ஒட்டு மொத்த அரங்கமே பல்ப் வாங்கிய தருணம்..!! (வீடியோ)
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கார்த்தியுடன் நடனமாடிய தொகுப்பாளினி பிரியங்கா திடீரென கீழே விழுந்துள்ளார்.
கால்கள் சுளுக்கி விட்டதோ என்று பதறிப்போன மாகாபா ஆனந்த் உடனே பிரியங்காவின் காலை பிடிக்க, அது ஏப்ரல் ஃபூல் என்று சொன்னப்பிறகு தான் தெரிந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ‘காற்றுவெளியிடை’ திரைப்படத்தின் ஹீரோ கார்த்தி, நாயகி அதிதி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கார்த்தியுடன் ஆர்வமாக நடனமாடிய பிரியங்கா திடீரென கீழே விழுந்தார். எழ முடியாமல் தடுமாற, அவரை அனைவரும் பிடித்து தூக்க உடனே, மாகாபா ஆனந்த் பதறிப்போய் பிரியங்காவின் காலை பிடித்தார்.
உடனே பிரியங்கா, ஏப்ரல் ஃபூல், எப்படி காலை பிடிக்க வச்சேன் பார்த்தியா என்று கேட்க, உடனே அனைவரும் பல்பு வாங்கிய கடுப்பில் நின்றிருந்தனர். நிஜமாகவே பிரியங்காவிற்கு கால் சுளுக்கிவிட்டதோ என்று பதறித்தான் போனார் கார்த்தி. அது உண்மையில்லை என்று தெரிந்த பின்னர் தான் நிம்மதியானார்.
Average Rating