முன்னாள் கணவர் என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்: நடிகை சார்மிளா புகார்..!!

Read Time:4 Minute, 8 Second

201704051137188682_char._L_styvpfஒயிலாட்டம், கிழக்கே போகும்பாட்டு, முஸ்தபா, நான், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் சார்மிளா. மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னாள் கணவர் தனது வாழ்க்கையை நாசமாக்கி விட்டதாக அவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து சார்மிளா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“நான், ‘கடல்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது நடிகர் பாபு ஆண்டனியுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் காதல்வயப்பட்டோம். பின்னர் திருமணம் செய்துகொள்ளாமலே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம். ஒரு கட்டத்தில் அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மன அழுத்தத்துக்கு உள்ளானேன். அதன் பிறகு டெலிவிஷன் தொடர்களில் நடித்த கிஷோர் சத்யாவுக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டோம். சில நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று தடைபோட்டார். இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலைமை ஏற்பட்டது. அப்போது விக்ரமுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அதிலும் நடிக்க முடியவில்லை.

அதன்பிறகு என்னை பிரிந்து அவர் ஷார்ஜா சென்று விட்டார். சில வருடங்கள் கழித்து நானும் ஷார்ஜாவுக்கு சென்றேன். அங்கு அவருடன் சேர்ந்து வாழ்ந்தேன். அப்போது அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. பிரபலமாவதற்காகவே என்னை அவர் மணந்தார் என்று புரிந்துகொண்டேன். அவரால் எனது வாழ்க்கையே நாசமாகி விட்டது.”

இவ்வாறு சார்மிளா கூறினார்.

இதற்கு நடிகர் கிஷோர் சத்யா பதில் அளித்துள்ளார் அவர் கூறியதாவது:-

“சார்மிளா ஒருபோதும் எனக்கு மனைவியாக வாழ்ந்தது இல்லை. மனம் ஒத்துப்போனால்தான் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் எங்களுக்குள் அது இருந்ததே இல்லை. அடிவாரம் படப்பிடிப்பில் சார்மிளா மன அழுத்தத்தில் இருந்தார். அவரை சகஜ நிலைக்கு கொண்டுவர நானும், படக்குழுவினரும் உதவினோம். படப்பிடிப்பின்போது சார்மிளாவுக்கு என்மீது காதல் ஏற்பட்டது. திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினார்.

நான் திருமணத்துக்கு மறுத்தேன். உடனே தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார். இதனால் வேறு வழியில்லாமல் சம்மதித்தேன். அப்போது எனக்கு 22 வயது. பின்னர் ஷார்ஜாவில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டேன். சார்மிளாவும் அங்கே வந்து விட்டார். அதன்பிறகுதான் அவருக்கு குடிப்பழக்கமும் போதை பழக்கமும் இருந்தது எனக்கு தெரியவந்தது. அவர் போதைக்கு அடிமையாகி இருப்பதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

இதனால் அவரை விவாகரத்து செய்யும்படி எனது பெற்றோர்கள் வற்புறுத்தினார்கள். அதன்பிறகு கேரளாவுக்கு திரும்பி வேறு பெண்ணை மணந்தேன்”.

இவ்வாறு கிஷோர் சத்யா கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருத்தடை செய்த மனைவி: மகளை கர்ப்பமாக்கிய தந்தை..!!
Next post பிரித்தானியாவில் தினசரி 18 மணி நேரம் தூங்கும் 13 வயது சிறுவன்..!! (வீடியோ)