மட்டக்களப்பில் கூலித் தொழிலாளி சுட்டுக்கொலை
மட்டக்களப்பு வவுணதீவு படைமகாமிலிருந்து புதன்கிழமை காலை விடுவிக்கப்படாத பிரதேசத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கூலித் தொழிலாளி ஒரவா உயிரிழந்துள்ளார். இந்தத் தொழிலாளி காலை 6.30மணியளவில் வவுணதீவ சோதனை நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இவர்மிது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த இவர் பலத்த சிரமத்தின் மத்தியில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அங்கு மரணமடைந்தார். இதன்போது உயிரிழந்தவர் 44வயதுடைய பருத்திச்சேனை கன்னக்குடாவை வசிப்பிடமாக கொண்ட மாணிக்கம் சிவராசா என்று கூறப்படுகின்றது.
இதேவேளை மட்டக்களப்பு கல்விப் பணிமனை முன்பாக நிரந்தர நியமனம் கோரி ஒரு மாதமாக இடம்பெற்று வந்த தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம் உயர்மட்ட அதிகாரிகளின் தலையீட்டினாலும், உறுதி மொழியாலும் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது.