காளி கோயிலில் தாயின் தலையை துண்டித்து நரபலி கொடுத்த மகன்..!!
மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள புருலியா மாவட்டம், பாமாகிராம் பகுதியை சேர்ந்தவர் புலி மஹாட்டோ(55). இவரது இளைய மகன் நாராயண் மஹாட்டோ(35). நேற்று முன்தினம் தனது தாயாரை வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் காளி கோயிலுக்கு அழைத்து சென்ற நாராயணன், அங்கு கிடந்த ஆடு-மாடுகளை வெட்டப் பயன்படுத்தும் நீண்ட வாளை எடுத்தார்.
சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று அந்த வாளால் தனது தாயாரின் தலையை ஓங்கி வெட்டினார். பல அடி தூரத்தில் தள்ளி விழுந்த தாயாரின் தலையை கண்டு பதற்றப்படாத நாராயணன் நேராக வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்த தனது அண்ணனிடம் ’நமது அம்மா காளி கோயிலில் இருந்த வாளை எடுத்து, தனது தலையை வெட்டிக் கொண்டார்’ என்று புளுகினார். பதறியடித்து ஓடிவந்த புலி மஹாட்டோவின் மூத்த மகன் இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, நாராயணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெற்ற தாய் என்றும் பாராமல் புலி மஹாட்டோவின் தலையை வெட்டி அவர் நரபலி கொடுத்த உண்மை அம்பலமானது.
உனது குடும்பம் நல்ல வளமான நிலைக்கு உயர வேண்டுமென்றால், உன் தாயாரை நீ எனக்கு நரபலி கொடுக்க வேண்டும் என்று தனது கனவில் வந்த காளி தேவி சொன்னதாகவும், காளியின் கட்டளைப்படி புலி மஹாட்டோவை நரபலி கொடுத்ததாகவும், போலீசாரிடம் நாராயண் மஹாட்டோ வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Average Rating