திருவண்ணாமலை அருகே அண்ணியுடன் வி‌ஷம் குடித்த வாலிபர் பலி..!!

Read Time:1 Minute, 35 Second

dead (10)திருவண்ணாமலை அருகே உள்ள கணேசபுரம் கண்ணகுருக்கை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது60). இவருக்கு குமார், மணிகண்டன்(27). என்ற மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

குமாருக்கு திருமணமாகி கன்னியம்மாள் என்ற மனைவி 3 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில் மணிகண்டனுக்கும் அவரது அண்ணி கன்னியம்மாளுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக சிலர் வதந்தி பரப்பியதாக கூறப்படுகிறது.

முருகேசன் இதுபற்றி மணிகண்டனின் விசாரித்துள்ளார். இதனால் மணிகண்டன், கன்னியம்மாள் இருவரும் அவமானம் தாங்காமல் மனம் உடைந்தனர்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன், கன்னியம்மாள் இருவரும் வி‌ஷம் குடித்தனர். மயங்கி கிடந்த அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கன்னியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் சிறுவர் தொழில் ஒழிக்கப்படுமா?..!! (கட்டுரை)
Next post சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பஸ் விழுந்ததால் பரபரப்பு..!! (வீடியோ)