கள்ளக்காதலி தாலி கட்ட சொல்லி வற்புறுத்தியதால் லாரி டிரைவர் தற்கொலை..!!

Read Time:1 Minute, 49 Second

201704091653276322_girl-friend-truck-driver-forced-suicide-to-tie-thaali_SECVPFபெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 35) லாரி டிரைவர். இவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியைச் சேர்ந்தவர் பிரியா(30). இவர் திருமணம் ஆகி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் வேல்முருகனுக்கும், பிரியாவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் நாமக்கல் என்.ஜி.சி.ஓ காலனியில் ஒரு வீட்டை வாடகை எடுத்து அங்கு குடும்பம் நடத்தி வந்தனர்.

நேற்று இரவு பிரியா தனக்கு தாலி கட்டி பின்னர் தன்னுடன் குடும்பம் நடத்துமாறு வேல்முருகனிடம் கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் வேல்முருகன் மனமுடைந்து காணப்பட்டார். அப்போது பிரியா தூங்க சென்றபின் வேல்முருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வேல்முருகனின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வேல்முருகனின் கள்ளக்காதலி பிரியாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: அதிர்ச்சி வீடியோ..!!
Next post தினமும் பிரட் சாப்பிடுபவரா நீங்கள்? இதோ காத்திருக்கும் ஆபத்து..!!