விஷ நாகத்துடன் புகைப்படம் எடுத்த நபர்: பலியான பரிதாபம்..!! (வீடியோ)
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கொடிய விஷ நாகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சுற்றுலாப்பயணி ஒருவர் அந்த பாம்பு தீண்டியத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பிச்செல்லும் பகுதியாகும்.
இங்கு சமீபத்தில் சுற்றுலா சென்ற நபர் ஒருவர் கொடிய விஷ நாகம் ஒன்றை தமது கழுத்தில் போட்டுக்கொண்டு புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளார்.
இதனையடுத்து பாம்பாட்டியிடம் இருந்து அந்த கொடிய நாகத்தை எடுத்து தமது தோளில் போட்டுக்கொண்டுள்ளார்.
இதை கூடி இருந்த பலரும் புகைப்படம் எடுக்கவும் தங்கள் மொபைலில் காணொளியாக பதிவு செய்யவும் முனைந்தனர்.
இதனைடையே விஷ நாகத்தை தோளில் போட்டுக்கொண்ட அந்த சுற்றுலாப்பயணி திடீரென்று சுருண்டு விழுந்துள்ளார். அவரது கன்னத்தில் அந்த விஷ நாகம் தீண்டியதாக பின்னர் தெரிய வந்தது.
இதையடுத்து உடனடியாக அந்த நபரை எடுத்துக்கொண்டு மருத்துவரிடம் செல்லாமல் பாம்பு விஷம் களைபவரிடம் விரைந்தனர். ஆனால் அந்த நபர் போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது.
விஷ நாகம் தீண்டியதும் அந்த விஷமானது அவரது ரத்த நாளங்களை பாதித்து அவருக்கு மாரடைப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஜோத்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating