அம்பாறையில் காவற்துறையினரை தாக்கிய 2 சந்தேகநபர்கள் கைது..!!

Read Time:1 Minute, 23 Second

sddsdddஅம்பாறை , மஹஓய – கொடிதுவக்குதலாவ -சமகிபுர பகுதியில் காவற்துறையுடன் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நபரொருவரை கடத்தி வைத்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய , நேற்று குறித்த பகுதிக்கு சென்ற காவற்துறை அதிகாரிகளை குறித்த தரப்பினர் தாக்கியுள்ள நிலையில் , அதில் ஒரு அதிகாரியின் துப்பாக்கியை பறிப்பதற்கு சந்தேகநபரொருவர் முயற்சித்துள்ளார்.

இதன் போது மற்றுமொரு காவற்துறை அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உட்பட இருவர் காயமடைந்தனர்.

தாக்குதலில் காயமடைந்த 5 காவற்துறை அதிகாரிகள் மஹஓய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் சிகிச்சைக்காக மஹஓய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தி பட உலகை நம்பி நான் இல்லை: கமல் பட நாயகி அதிரடி..!!
Next post அமெரிக்க மன்மதனுக்கு 1300 பிள்ளைகள்! காட்டிக் கொடுத்த டி.என்.ஏ. பரிசோதனை..!!