திண்டுக்கல் அருகே திருமணத்துக்கு மைனர் பெண் கடத்தல்..!!
Read Time:1 Minute, 21 Second
திண்டுக்கல் அருகில் உள்ள சாணார்பட்டி யூனியன் மருநூத்து பகுதியை சேர்ந்தவர் ஷேக்ஒலி. இவரது மகள் ஆகாஷ்பானு (வயது17). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் உள்ளார்.
அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த சந்தானம் மகன் ஹரிகிருஷ்ணன் (22). இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவரம் ஆகாஷ்பானு பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் சம்வத்தன்று ஹரிகிருஷ்ணன் தனது காதலியுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஷேக்ஒலி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். பின்னர் நேற்று அவர்களை பிடித்து வந்தனர். மைனர் பெண்ணை கடத்திய ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆகாஷ்பானு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
Average Rating