அரியலூர் அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி அடித்துக்கொலை..!!

Read Time:1 Minute, 42 Second

201704171540324444_pregnant-woman-murdered-police-investigation-parents-near_SECVPFஅரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் சர்மிளா (வயது 26). இவரும் அப்பகுதியை சேர்ந்த கலைராஜ் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சர்மிளாவை அவரது பெற்றோர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவருடன் 3 வருடம் வரை வாழ்ந்து வந்தார். இதன் மூலம் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் சர்மிளா கணவரை பிரிந்து மீண்டும் தனது காதலன் கலைராஜூடன் சென்னையில் வாழ்ந்து வந்தார். அவர் மூலம் தற்போது சர்மிளா 7மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

இதனிடையே அவர், தனது குழந்தையை அழைத்து செல்வதற்காக செந்துறை வந்தார். ஆனால் குழந்தையை அழைத்து செல்லக்கூடாது என்று சர்மிளாவுக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவர் செந்துறை பொன்பரப்பியில் உளள அவரது உறவினர் வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். காதலனை திருமணம் செய்ததால் சர்மிளாவை அவரது பெற்றோரே கவுரவ கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து செந்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிபிய கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்பு..!!
Next post சுட்டெரிக்கும் சூரியனால் மக்களுக்கு திண்டாட்டம்..!! (கட்டுரை)