மூன்று மணிநேரத்தில் ஜாமீனில் வந்த விஜய் மல்லையா: சொன்னது இதுதான்..!!

Read Time:2 Minute, 21 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)இந்திய வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தப்பி பிரித்தானியாவில் தலைமறைவாக வசித்து வந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஜய் மல்லையா மதுபானம், விமான நிறுவன சேவை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுப்பட்டு கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆவார்.

எனினும், 4 ஆண்டுகளுக்கு முன்னர் விமான சேவைகளில் இழப்பு ஏற்பட்டதாக கூறி பல்வேறு வங்கிகளில் சுமார் 9,000 கோடி வரை கடன் பெற்றுள்ளார்.

ஆனால், இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தியதால் அவரது சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்தது.

மேலும், கடந்த 2012-ம் ஆண்டு முதல் அவரது கிங்ஃபிஷர் விமானங்கள் முடக்கப்பட்டன.

இதுமட்டுமில்லாமல், விஜய் மல்லையா கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியானதை தொடர்ந்து கடந்தாண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து தப்பி பிரித்தானியாவில் தலைமறைவானார்.

இங்கிலாந்து தலைநகரமான லண்டன் நகரில் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் லண்டன் நகரில் இருந்து அவரை ஸ்காட்லாந்து பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், இன்று மாலை மான்செஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா விசாரணைக்கு உட்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே கைதான மூன்று மணிநேரத்தில் விஜய் மல்லையா நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6 அடி நீள ராட்சத மண்ணுளி பாம்பு பிடிபட்டது..!!
Next post தல அஜித்துடன் இணைந்த சூப்பர் ஸ்டார்- பக்கா மாஸ்..!!