பிரபல நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு: தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!
Read Time:1 Minute, 18 Second
பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ரம்யா சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நரகம் அல்ல, அங்கு நல்ல மனிதர்களும் உள்ளனர் என்று கூறியிருந்தார்.
பாகிஸ்தானை புகழ்ந்து தெரிவித்த அவரது கருத்து இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என கூறி கட்நாமனே விட்டல கவுடா என்பவர் ரம்யாவுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
இதைத் தொடர்ந்து ரம்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கும் கர்நாடகா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நமது ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதற்கு பாகிஸ்தானின் மொத்த மக்களும் பொறுப்பில்லை என்பதனை கருத்தில் கொள்ளும்பொழுது, ரம்யா தெரிவித்த கருத்து தேசதுரோகம் ஆகாது என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நடிகை ரம்யாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
Average Rating