கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருந்த மனைவி: இருவருக்கும் கணவன் வைத்த ஆப்பு..!
கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருந்த மனைவியை பார்த்த கணவர் அவர்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ஜோலார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமார்(28). இவருக்கு நந்தினி(23) என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் அடியத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்(24) என்பவர் புகுந்துள்ளார். அதவாது நந்தினிக்கும், தேவந்திரனுக்கும் அவ்வப்போது கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதை அறிந்து அதிர்ச்சியடைந்த குமார் நந்தினியை கண்டித்துள்ளார்.
இதனால் வாக்குவாதம் முற்ற நந்தினி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பப்பனப்பள்ளி பகுதியில் உள்ல தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றும், நந்தினியின் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதையறிந்த குமார், நந்தினியை பார்க்க வந்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.
அப்போது நந்தினி தன் கள்ளக்காதலுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த குமார், நந்தினியை கையும், களவுமாக மாட்டி விட வீட்டின் வெளிப்பக்க கதை பூட்டு போட்டு பூட்டியுள்ளார். அதன் பின்னர், உறவினர்களை அழைத்து அவர்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்து அங்கிருந்து விரட்டியுள்ளார்.
Average Rating