பாம்பு ஆடையை மாற்றும் வைரல் காட்சி..!! (வீடியோ)
பாம்பு ஆடையை மாற்றும் வைரல் காட்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இது போன்ற காட்சியை நேரில் இருந்து பார்ப்பது மிகவும் குறைவு என்றுதான் கூறவேண்டும்.
சரி பாம்புகள் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமா..?
பாம்பைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட கதைகள் தொண்ணூறு சதவிகிதம் பொய். குறிப்பாக சினிமாக்களில் காட்டப்படும் பாம்பு கதைகளை நம்பவே நம்பாதீர்கள்.
மனித இனம் தோன்றுவதற்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பாம்புகள் தோன்றிவிட்டன.
எனவே நம்மைவிட அவற்றுக்கு பூமியில் வாழும் உரிமை கூடுதல்.
நம் நாட்டில் வாழக்கூடிய பாம்புகளில் கொடிய விஷம் கொண்டவை நான்கே நான்குதான். நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன், ராஜநாகம் ஆகியவற்றுக்கு மட்டுமே விஷமுண்டு. நாம் காணும் பாம்புகளில் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பாம்புகள் விஷமற்றவையே.
நாகப்பாம்பு பற்றிய சில தகவல்கள்….
நாகப்பாம்புகளின் உடலில் காணப்படும் சிறப்பான உறுப்பு தலையில் இருக்கும் ஒரு விரியக் கூடிய தசை ஆகும்.
இவை தாக்கும் போதோ, தற்காப்புக்காகவோ அவற்றை விரிக்கும்.
இது எதிரியை அச்சுறுத்தவே ஆகும். இதனை படம் எடுத்தல் என்பர்.
இப்பாம்புகள் மஞ்சள் கலந்த வெள்ளை, கரும்பழுப்பு மற்றும் வெளிர்சாம்பல் நிறங்களில் இருக்கின்றன.
இதன் நிற அமைப்பின் காரணமாக அது தான் வாழும் தரையில் புற்களுக்கு இடையே அரிதாகவே கண்ணுக்குத் தெரிகிறது.
ஒருவகை நாகப் பாம்பின் படத்தில் மூக்குக் கண்ணாடி போன்ற குறி ஒன்றுள்ளது. இதனால் கண்ணாடிப் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.
Average Rating