பணம்! பணம்!! பணம்!!! -ஐரோப்பா வரிசையில் சுவிஸிலும் ஆப்பு….
இந்தியா கனடா அமெரிக்கா ஐரோப்பா வரிசையில் சுவிஸிலும் ஆப்பு…. சுவிசர்லாந்தில் வியாழன் இரவு 21.50க்கு சுவிஸ்அரச SF தொலைக்காட்சியில் இலங்கை தமிழர்களிடம் புலிகள் வலிந்து பணம் வாங்குவதை தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
1997ம் நடராஐன் முரளிதரன் பிடிபட்ட பொழுது புலிகளின் அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெருந்தொகையான 4லட்சம் சு.பிராங்கும் மற்றும் ஆவணங்களையும் புலனாய்வு துறையினர் வாகனத்தில் எற்றிச்சென்ற பின் சுவிசர்லாந்தில் வாழும் தமிழ் மக்களிடம் பணம் கேட்பது வீடுகளுக்கு போய் பணம் சேர்ப்பது போன்ற செயல்கள் சட்டரீதியாகவே தடை செய்யப்பட்டதை குறிப்பிட்டு காட்டுகின்றது.
புலிகளின் தற்போதைய புனர்வாழ்வுக்கு பொறுப்பான அன்ரன் பொன்ராசா தமிழர்களிடம் நாங்கள் பணம் கேட்கவில்லை தமிழர்கள் குற்ற உணர்வினால் தான் பணத்தைக் புலிகளுக்கு கொடுக்கின்றார்கள் தமிழர்களே தங்களின் குற்றஉணர்வினால் தாமே விரும்பி புலிகளுக்கு கொடுக்கும் பொழுது நாம் அதனை தடுக்க முடியுமா? என்ற பாணியில் தெளிவாகச் சொல்லியுள்ளார். நாம் கடனாகவே தமிழ்மக்களிடம் பணம் வாங்குகிறோம்.
அதேவேளை தனிப்பட்ட ரீதியில் சுவிஸில் உள்ள சிலரைப் பெயர் குறிப்பிட்டு இவரிடம் கேட்டபோது இவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த காலங்களில் ரசியா நாட்டு கூத்தாடிகளுடன் சேர்ந்து ஒரு சில இலங்கை நாடகங்களை கலப்புக் கலாச்சாரங்களாக வெளிக்கொண்டு வந்து ஏமாற்றம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்…
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பல நாடுகள் தற்பொழுதுதான் புலிகளை தடைசெய்துள்ளது ஆனால் சுவிற்சர்லாந்தில் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட போதிலும் சுவிஸ்அரசு சிறுசலுகைகளைக் கொடுத்து இருந்தது புலிகள் கடந்த காலத்தில் பாடசாலைப் பிள்ளைகளை வைத்து பகிரங்க கூட்டங்களை மேற்கொண்டதன் பிரதிபலிப்பே…
சுவிற்சர்லாந்து புலனாய்வுத்துறையினர் தமது மக்களுக்கும் மற்றும் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழருக்கும் ஒரு எச்சரிப்பாக இந்த செய்தியை விடுத்துள்ளது என்று தெரியவருகின்றது.
********************************************
சுவிசர்லாந்து அரச SF தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய விவரணச்சித்திரத்தை கீழே PLAY அமுக்கிப் பார்வையிடவும்
சுவிசர்லாந்து அரச SF தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய விவரணச்சித்திரத்தை மேலேPLAY அமுக்கிப் பார்வையிடவும்