ஓடிக் கொண்டிருக்கும்போதே பேருந்து படிக்கட்டு உடைந்த அவலம்… தொங்கிக் கொண்டிருந்தவரின் நிலை..!! (வீடியோ)
Read Time:1 Minute, 14 Second
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பயணத்துக்கு இருக்கும் முக்கியமான போக்குவரத்து வாகனம் அரசு பேருந்து தான். வரமாக இருக்க வேண்டிய இந்த சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு பல நேரங்களில் சாபமாகவே அமைந்துள்ளது.
கையை கிழிக்கும் ஜன்னல் கம்பிகள், இருக்கைகள், பஸ்ஸில் திடிரென விழும் ஓட்டைகள் என பல நேரம் நம்மை தொந்தரவு செய்கின்றன. அதே போன்றே விழுப்புரத்திலிருந்து கிளம்பிய பேருந்து ஒன்றின் படிக்கட்டு மேட்டில் ஏறி இறங்கியவுடன் கீழே தனியாக கழண்டு விழுந்துள்ளது.
அதில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் காலில் அடிபட்டு ரத்தம் சொட்ட தொங்கி கொண்டிருந்துள்ளார்.
“படிகட்டில் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிரான சதியா?” என நெட்டீசன்கள் சமூக வலைதளங்களில் நையாண்டி செய்துள்ளனர்.
Average Rating