11 பிரபாகரன் புலி உறுப்பினர்கள் பெற்றோரிடம் கையளிப்பு

Read Time:2 Minute, 13 Second

TMVP.bmpகருணாஅம்மான் தலைமையிலான புலிகள் அமைப்பினரின் வாகரை, மாங்கேணி அரசியல் காரியாலயத்தில் சரணடைந்த பிரபாகரன் தலைமையிலான புலி உறுப்பினர்கள் 11பேர் சர்வதேச தொண்டர் அமைப்பு பிரதிநிதிகளின் முன்னிலையில் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளார்கள் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

கருணாஅம்மானின் ரிஎம்விபி அமைப்பின் கிழக்குமாகாண அரசியல்பிரிவு தமைமையக மட்டக்களப்பு காரியாலயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த கையயளிப்பு நிகழ்வு இடம்பெற்றுது.

இந்த நிகழ்வில் TMVP கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளர் எதிர்மன்னசிங்கம், பிரதி அரசியல் உறுப்பினர் எஸ்.குணாளன் உட்பட பல வெளிநாட்டு தொண்டர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகி இருந்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு ஏறாவூர் பொதுச் சந்தைக்கருகாமையில் கைத்துப்பாகக்கி குழுவினரின் தாக்கதலில் படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் இறந்துள்ளார். மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தவேளை இவர் இறந்துள்ளார்.

36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான எம்.எஸ்.எம்.றியால் என்ற இக்காவல்துறை உத்தியோகத்தர் வியாழக்கிழமை பிற்பகல் காவல் நிலையத்திலிருந்து வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தவேளை பொதுச் சந்தைக்கருகில் சுடப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பணம்! பணம்!! பணம்!!! -ஐரோப்பா வரிசையில் சுவிஸிலும் ஆப்பு….
Next post ஜனாதிபதியின் அழைப்பு குறித்து ஜி.எல்.பீரிஸ் கருத்து