கபாலியை தொடர்ந்து ஜப்பான் மொழியில் டப் செய்யப்படும் பாகுபலி-2?..!!
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி-2’ கடந்த வாரம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இதுவரை இந்திய சினிமாவில் எந்தவொரு படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது. இதனால், படமும் வசூலில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது.
வெளிநாடுகளில் அமெரிக்கா, கனடா, அரபு நாடுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இப்படம் இந்திய மொழிகளிலேயே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, இப்படத்தை ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய படங்களுக்கு ஜப்பானில் மிகுந்த வரவேற்பு உண்டு. ரஜினி நடிப்பில் உருவான நிறைய படங்கள் ஜப்பானில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளன. ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘முத்து’ படம் முதல் ‘கபாலி’ படம் வரை ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.
தற்போது, அந்த வரிசையில் ‘பாகுபலி-2’ படத்திற்கும் வெளிநாடுகளில் நல்ல மவுசு கூடியுள்ளதாலும், ஜப்பானிலும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் இருப்பதாலும் அந்த மொழியில் டப் செய்து வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating